பாட்னா குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் அஸ்தியை கரைக்க இன்று பாஜக யாத்திரை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் அஸ்திரையை கரைப்பதற்காக இன்று பாரதிய ஜனதா கட்சி யாத்திரையை நடத்த இருக்கிறது.

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுகள்வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

BJP to march with ashes of Patna blast victims

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் அஸ்தியை கங்கையில் கரைக்க பிரமாண்ட யாத்திரைக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.

"அஸ்தி கலச யாத்திரை" என்று பெயருடன் பாட்னா பாஜக அலுவலகத்தில் இருந்து கங்கை நதிக்கு பேரணியாக செல்ல இருக்கின்றனர். இதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீகுலைக்கும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+