கோவா பாணியில் காங்கிரசுக்கு கல்தா.. மேகாலயாவில் குறுக்கே புகுந்து ஆட்சியை பிடிக்கிறது பாஜக கூட்டணி?
மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என கூறப்படுகிறது.
Recommended Video
ஷில்லாங்: மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலந்து மற்றும் மேகாலயாவில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திரிபுராவில் பாஜக பெரும்பான்மையுடனும், நாகாலந்தில் கூட்டணியுடனும் ஆட்சியமைக்கிறது.
ஆனால் மேகாலயாவில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மேகாலயாவில் பாஜக 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
மத்தியிலும் மணிப்பூரிலும்
மத்தியில் பாஜகவுடன் என்பிபி கூட்டணியில் உள்ளது. இதேபோல் மணிப்பூர் மாநிலத்திலும் பாஜக- என்பிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தனித்து போட்டி
ஆனால் மேகாலயாவில் என்பிபியும் பாஜகவும் தனித்து களம் காண்கின்றன. பாஜக 47 இடங்களிலும் என்பிபி 52 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது.
காங்கிரஸ் ஆட்சி?
மேகலாயாவில் காங்கிரஸ் 59 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. தொடர்ந்து 12 இடங்களில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
என்பிபி 3 இடங்களில்
இதேபோல் நாகா மக்கள் கட்சி எனும் என்பிபி 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தக்கட்சி இதுவரை 3 இடங்களை கைப்பற்றியுள்ளது.
6 இடங்களில் வெற்றி
பாஜக 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சுயேச்சை உள்ளிட்ட மற்றக்கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
கூட்டணி குதிரை பேர ஆட்சி
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் என்பிபி, மற்றும் மற்றவைகள் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியமைத்ததைப்போல் மேகாலயா மாநிலத்திலும் பாஜக கூட்டணி குதிரை பேர ஆட்சியை அமைக்கும் என கூறப்படுகிறது.