டெல்லியில் 2வது நாளாக நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
டெல்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று 2வது நாளாக டெல்லியில் நடைபெற்று வருகிறது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை துவங்கியது. கூட்டத்தின் துவக்க விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமித் ஷா துவக்க உரையாற்றினார். கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இன்றைய கூட்டத்திலும் அமித் ஷா, மோடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,
பாஜக, அதன் தலைவர்கள், அரசை யாராவது விமர்சித்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் நாட்டை யார் விமர்சித்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications