Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டிய ஜார்கண்ட் பக்கம் திருப்புங்க.. இலவசங்களை அள்ளி வீசிய பாஜக.. சூடுபறக்கும் தேர்தல் களம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக வரவில்லை. இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை மறுநாள் (அக்டோபர் 8) வெளியாக உள்ளது. முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை 6 மணி முதல் வெளியாகி வருகிறது.

jharkhand bjp

ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. மறுபக்கம் பாஜகவை வீழ்த்தி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியும் பலத்த வியூகங்களை வகுத்து வருகிறது. பெரும்பாலான எக்சிட் போல் முடிவில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவே தகவல் வெளியாகி வருகிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளதாக எக்சிட் போல் முடிவுகள் கூறுகின்றன. ஜம்மு மாகாணத்தில் பாஜக அதிக சீட்களை கைப்பற்றினாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் விரைவில் ஜார்கண்ட் தேர்தல் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

அங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா 30 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

ஜார்கண்ட் தேர்தல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. பான்ச் பிராணா என்ற பெயரில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் பிரதானமாக ஐந்து வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி பெண்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் விதமாக மாதம் ரூ.2,100 வழங்குவது, ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, அனைவருக்கும் வீடு கட்டி தருவது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளனர்.

மேலும், போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அரசு நிர்வாகத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்றும் சொல்லியுள்ளனர்.

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்குவதுடன், ஆண்டுக்கு பண்டிகை காலங்களில் இரண்டு சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இலவச திட்டங்களை பாஜக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலிலும் பாஜக - ஜார்கண்ட் முக்தி மோர்சா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தயாராகும் வகையில் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+