தோல்வி பயத்தில் பிதற்றுகிறார் கெஜ்ரிவால்: பாஜக தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் கூறுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனையிட்டபோது அதில் 4 எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு தான் வாக்குப்பதிவாகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் எதுவும் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

BJP says 'AAP making allegations in nervousness' after EC dismisses Kejriwal's apprehensions on EVM

இந்நிலையில் இது குறித்து பாஜக கூறுகையில்,

டெல்லி தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் கெஜ்ரிவால் உள்ளார். அதனால் தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பாஜகவுக்கு மட்டும் வாக்குப்பதிவாகுமாறு ஏதோ செய்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். தேர்தல் ஆணையம் மீதே குறை கூறியதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு மரியாதை அளிக்க தெரியாது என்பது தெரிகிறது.

இதே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் கடந்த 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற காரணமாக இருந்தது. அப்படி என்றால் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது செய்து வெற்றி பெற்றாரா? இதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+