இடஒதுக்கீட்டுக்கு பா.ஜ.க. எதிரி அல்ல... தேர்தலுக்கு பின்பே பீகார் முதல்வர் குறித்து முடிவு: அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

பாட்னா: இடஒதுக்கீட்டை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை; பீகாரில் யார் முதல்வர் என்பதை சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் தீர்மானிப்போம் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாவது:

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அப்போது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழு கூடி முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும்.

பீகார் மக்களைப் பொறுத்தவரை நிதிஷ்குமார் தலைமையிலான அரசை காட்டாட்சியாகத்தான் பார்க்கின்றனர். நிச்சயம் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.

பீகாரில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, நிதிஷ்குமார் ஆகியோர் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பீகார் தொடர்ந்தும் பின் தங்கிய மாநிலமாகவே இருக்கிறது. பா.ஜ.க.வால் மட்டுமே இந்த மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

வளர்ச்சி விவகாரத்தை திசை திருப்பவே இடஒதுக்கீடு மற்றும் மாட்டிறைச்சி விவகாரங்களை ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் எழுப்புகிறது.

தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. எதிர்க்காது. நாங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்; தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைக்கமாட்டோம்.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகளில் 32 முதல் 34 இடங்களையும் 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 32 தொகுதிகளில் 22 முதல் 24 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+