குஜராத், ஹிமாச்சலில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும்.. ராஜ்நாத் சிங் உற்சாகம்!
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மோடி பிரதமரான பிறகு அவரது சொந்த தொகுதிக்கு நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை நாடே உற்று நோக்கி வருகிறது.

இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. கிட்டதட்ட இருமாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய இருமாநிலங்களிலும் பாஜக தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications