பிராடுத்தனம் செய்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் ஜெயிக்கும்: யஷ்வந்த் சின்ஹா
Recommended Video

டெல்லி: பிராடுத்தனம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா தலைமையிலான அரசு இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கடத்தி வைக்கப்பட்ட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிச்சயம் காங்கிரஸை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிராடுத்தனம் செய்து பாஜக வெற்றி பெறும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார் சின்ஹா. பாஜகவில் இருந்து விலகிய அவர் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications