மோடி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு- வாரணாசியில் பாஜகவினர் போராட்டம்!!

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வாரணாசியில் அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாரணாசி லோக்சபா தொகுதியில் நரேந்த்ரிஅ மோடி போட்டியிடுகிறார். இன்று அங்கு அவர் 2 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தார். ஆனால் ஒரு இடத்தில் மட்டுமே கூட்டம் நடத்த மாவட்ட தேர்தல் நிர்வாகம் அனுமதி கொடுத்தது.

அதேபோல் கங்கையில் ஆரத்தி வழிபாடு நடத்தவும் மோடி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கும் முதலில் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. பின்னர் அனுமதி அளித்தது. இருப்பினும் தாம் ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று மோடி அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்துக்கு வெளியே பாரதிய ஜனதாவின் பெருந்திரளாக ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறமால் தடுக்க கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+