கேரளாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு- வாகனங்கள் சேதம்!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்ட காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இக்குண்டுவெடிப்பில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கார் ஒன்றில் திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதில் கார் தீ பற்றி எரிந்தது.

கார் அருகே இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. போலீசார் நடத்திய சோதனையில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது தெரியவந்தது.
அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications