உ.பி.யில் வாயில் துணி திணிக்கப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கிய இளம்ஜோடி: கௌரவ கொலையா?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இளம் ஜோடி மரத்தில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பிப்ரா கிராமத்தில் 20களில் உள்ள ஜோடி ஒன்று மரத்தில் பிணமாகத் தொங்கியதை உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆண் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்திருந்தார். சுடிதார் அணிந்திருந்த பெண்ணின் நெற்றியில் குங்குமம் இருந்தது. அவர்களின் வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டிருந்தது.
ஒரு வேளை குடும்பத்தாரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டவர்களை கொன்று மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த ஜோடி யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவின் தொகுதி தியோரியா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது குறித்து மாநில பாஜக தலைவர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் ஆளுநர் பி.எல். ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தர பிரதேசத்தில் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications