Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி இந்தியா கேட் அருகே தூக்கில் தொங்கிய வாலிபர்: கொலையா? தற்கொலையா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரபரப்பான டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் அடையாளமான இந்தியா கேட் பகுதி பாதுகாப்பு அதிகம் மிக்க பகுதியாகும். தமிழ் சினிமாக்களில் இந்த இடங்களில் கொலைகள் நடப்பது போல காண்பிக்கப்படும். ஆனால் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் சுற்றி வரும் இடம்தான் இந்தியா கேட் பகுதி.

Body found hanging in a park near India Gate, police suspects suicide

நேற்று அதிகாலையில் இந்த இடத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் உள்ள ஒரு மரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனை செய்தனர். அவரது கழுத்தில் இருந்த ஐ.டி கார்டு மூலம் உயிரிழந்த இளைஞர் பெயர் ஷேசாநாத் என்பதும் அவரது மேற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

உடல் ஊனமுற்றவரான இந்த இளைஞர் தூக்கில் தொங்கிய காரணம் என்பது பற்றி தெரியவில்லை என்று டெபுடி கமிஷனர் விஜய் சிங் தெரிவித்துள்ளார். தற்கொலை கடிதம் எதுவும் அந்த இடத்தில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அதிகாலை மூன்று மணியில் இருந்து 5 மணிக்குள் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இது தற்கொலையா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனரா என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+