மோடி பேசிய மைதானத்தில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. அசம்பாவிதம் தவிர்ப்பு
பாட்னா: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் நடந்த பாட்னா காந்தி மைதானத்தில் இன்று மீண்டும் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனையிட்டு வெடிகுண்டைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் இந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த மைதானத்தில்தான் ஞாயிற்றுக்கிழமையன்று மோடி பேசினார். அவர் வருவதற்கு முன்புதான் தொடர் குண்டுவெடிப்புநடந்தது. அதில் 6 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் இந்த மைதானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்றனர். காந்தி மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர சோதனை போட்டனர். அதில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஜெயந்த் காந்த் கூறுகையில், மர்மப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருள் குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்த மர்மப் பொருள் பின்னர் வெடிகுண்டு என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அதை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர். இதன் மூலம் மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
ராஞ்சியில் சிக்கிய வெடிபொருட்கள்
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை போலீஸார் தீவிர ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications