ஜெட் ஏர்வேஸை அடுத்து 10 இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்டிகோ நிறுவனத்தை சேர்ந்த 10 விமானங்களுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள் 5க்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன கால் சென்டருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.

Bomb scare in 10 Indigo planes

எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் 10 இன்டிகோ விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஜம்முவில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து இன்டிகோ விமானங்களும் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை ஓரங்கட்டி அதை முழுமையாக சோதனை செய்ய 5 மணிநேரம் ஆகும். இதனால் இன்டிகோ நிறுவனத்திற்கு மணிக்கு ரூ.7 லட்சம் நஷ்டம் ஏற்படும். வெடிகுண்டு சோதனைகளால் இன்டிகோ நிறுவனத்திற்கு ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை நஷ்டம் ஏற்படும்.

பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ள வேளையில் இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+