For Daily Alerts
Just In
சண்டிகர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சண்டிகர்: சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக காவல்துறையினருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 விமான நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
Comments
English summary
Bomb Scare at Chandigarh Airport, bomb disposal squad reached th spot
Story first published: Tuesday, October 11, 2016, 1:06 [IST]