டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி: பயணிகள் கடும் அவஸ்தை
டெல்லி: டெல்லியிலுள்ள ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அந்த ரயில் நிலையம் மூடப்ப்டடு பயணிகள் அவஸ்தைக்குள்ளாகினர்.
டெல்லி மெட்ரோ ரயில் ஆணைய அலுவலகத்திற்கு இன்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் ஹூடா சிட்டி சென்டர் ரயில் நிலையம் உட்பட மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இந்த தகவல் போலீசாருக்கு அளிக்கப்பட்டது. ஹூடா சிட்டி ரயில் நிலையத்திற்கு போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விரைந்தனர். சோதனை நடத்த வசதியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ரயில் நிலையம் சீல் வைக்கப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
3 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பு புலறி என்பது தெரியவந்தது. பெஷாவர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து விஷமிகள் இதுபோல புரளியை கிளப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போன் செய்தவரை கண்டுபிடிக்க போலீசார் களமிறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் மெட்ரோ ரயில் பயணிகள் கடும் அவஸ்தையடைந்தனர்.












Click it and Unblock the Notifications