டெல்லியில் பல இடங்களில் குண்டு வைத்துள்ளோம்: போன் மிரட்டலால் பரபரப்பு
டெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக வந்த போன் அழைப்பை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பணியாற்றும் எஸ்.பி.யின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் டெல்லியில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து எஸ்.பி. டெல்லி போலீசாருக்கு போன் செய்து தகவல் அளித்தார். இதை தொடர்ந்து டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது போலி மிரட்டலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு நேற்று மாலை வந்துள்ளது.