சஞ்சய்தத்துக்கு பரோல் நீட்டிப்பு- மகா. அரசுக்கு மும்பை ஹைகோர்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Bombay high court questions repeated parole extensions for Sanjay Dutt
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு பரோல் நாட்களை நீட்டித்தது குறித்து மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத், புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

பிறகு, கடந்த மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. அதையடுத்தும் மீண்டும் மார்ச் 21 ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டது. அவருக்கு பரோல் காலத்தை நீட்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், கைதிகளிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

சாதாரண குடிமகன் பரோல் பெற ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000 என பிணைத் தொகை வாங்கப்படுகிறது. ஆனால் சஞ்சய் தத்திடம் இருந்து ரூ. 5,000 மட்டுமே பெறப்பட்டுள்ளது. மாநில அரசு எதனால் இந்த பாரபட்சம் காட்டுகிறது? என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் ஒரு குழு அமைத்து பரோல் விதிமுறைகளில் ஏற்றத் தாழ்வுகளை களைந்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+