பாஜக அணிக்கு 317 இடங்கள்.. இது 'பெட்டிங் பார்ட்டிகள்' நம்பிக்கை!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 317 இடங்களைக் கைப்பற்றும் என்பது பெட்டிங் கட்டும் புக்கிகளின் கணக்காம்.
கிரிக்கெட் மட்டுமல்ல லோக்சபா தேர்தல் களமும் கூட 'பெட்டிங்வாசி'களால் களைகட்டிவிடுகிறது. இப்போது மே 16-ந் தேதி அன்று என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் வரும் என்பதுதான் பெட்டிங்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 317 இடங்கள் கிடைக்கும் என்கின்றனர் புக்கிகள். இதனடிப்படையில் பெட்டிங் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் உ.பி, மகாராஷ்டிராவில் மொத்தம் 85 இடங்களை பாஜக அணி கைப்பற்றும்; ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அணிக்கு ஸ்வீப் வெற்றி கிடைக்கும் என்பதெல்லாமும் கூட பெட்டிங் பாயிண்டுகள்.
பெட்டிங் கட்டி விளையாடினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றாலும் கூட பண மோகமும் பெட்டிங் ஆசையும் யாரைத்தான் விட்டது!












Click it and Unblock the Notifications