மொபைல் போன் மோகம் - அக்காவையும், அக்கா வீட்டுக்காரரையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன்
Subscribe to Oneindia Tamil
அஸ்வில்: மிசோரத்தில் மொபைல் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் அக்காவையும், அவரின் கணவரையும் 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் போன்கள் மீது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தீராத மோகம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அக்கா மற்றும் அவரது கணவருக்கு மாநில அரசின் நல உதவியாக கிடைத்த 66 ஆயிரம் ரூபாய் வீட்டில் இருப்பதை அறிந்த அந்தச் சிறுவன் அதிலிருந்து, மொபைல் போன் வாங்க சகோதரியிடம் பணம் கேட்டுள்ளான்.
பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த சிறுவன் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு, கோடாரியால் வெட்டி செல்போன் வாங்குவதற்காக 36 ஆயிரம் ரூபாயுடன் மாயமான சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications