தன்னம்பிக்'கை'யுடன் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர் 71% மார்க் பெற்று தேர்ச்சி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள போகாவ்ன் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் குமார்(16). அஜய்க்கு பிறப்பிலேயே இரு கைகளும் கிடையாது. கைகள் இல்லாவிட்டாலும் அவருக்கு ஆண்டவன் தன்னம்பிக்கையை டன் கணக்கில் அளித்துள்ளார்.

பிற குழந்தைகளை போன்று பள்ளிக்கு சென்ற அஜய் கால்களால் எழுதக் கற்றுக் கொண்டார். அவர் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது.
இதில் அஜய் குமார் 71.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அஜய் கால்களால் பேனாவை பிடித்து எழுதுவது மட்டும் அல்ல லேப்டாப்பையும் பயன்படுத்துகிறார்.
கால்களால் அற்புதம் செய்யும் அஜய் குமாருக்கு என்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications