பிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம்.. செய்வதறியாமல் 15 லட்சம் பேர் அஸ்ஸாமில் தவிப்பு
குவகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி செய்வதறியாது தவிக்கிறார்கள். இதேபோல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஜீவாதார நதியான பிரம்மபுத்ராவில் வரலாறு காணாத வெள்ளம் பாயந்தோடுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். 15 லட்சம் பேர் என்ன செய்து என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இதுவரை 20 ஆயிரம் பேர் 68 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உறைவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல லட்சம் பேரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் எடுத்து வருகிறார்கள்.
வெள்ளத்தால் வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பர்பேட்டா என்ற மாவட்டம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 5லட்சம் பேர் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மோரன் என்ற மாவட்டத்தில் 52 கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அங்கு மொத்தமாக வீடுகளை விட்டு வெளியேவிட்டனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 10 நதிகளின் நீர் மட்டமும் அதிகமாக உயர்ந்து உள்ளது. இதனால் தேமாஜி, லகீம்பூர் உள்ளளிட்ட பகுதிகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜிராங்கா தேசிய பூங்காவில் 70 சதவீத பகுதிகள் நீரில் மூழ்கி கிடக்கின்றனர். வனவிலங்குகள் ஷெட்டர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இதுவரை அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தின் வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் அந்த மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள் செப்டம்பர் வரை விடுமறை எடுக்க வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் மேகாலயா உள்பட அஸ்ஸாமின் அண்டை மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் வெள்ளத்தின் பாதிப்பு மிக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications