ஏறுமுக உற்சாகம்! மும்பை பங்குச் சந்தை 684.48 புள்ளிகள் உயர்வு! நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரிப்பு!!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டிருந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை 574.13 புள்ளிகள் அதிகரித்து 20,536.29 ஐ எட்டியது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 183.65 புள்ளிகள் உயர்ந்து 6.083 புள்ளிகளாக இருந்தது.
ரிசர்வ் வங்கி நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்ற நிலையில் இந்திய பங்கு சந்தைகள் நாள் முழுவதும் உயர்ந்தே காணப்பட்டது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் 684.48 புள்ளிகள் அதிகரித்து 20,646.64 ஆக முடிவடைந்தது. நிஃப்டியும் 3 ஆண்டுகாலத்துக்குப் பிறகு 200 புள்ளிகள் அதிகரித்து 6,124 ஆனது.
இதேபோல் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று உயர்ந்து காணப்பட்டது.












Click it and Unblock the Notifications