உபி தேர்தலில்.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் தோல்வி.. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கலை
உபி தேர்தலில் பகுஜன் சமாஜ் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது
Recommended Video
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டசபை இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கணிசமான வாக்குளை வாங்கி சவால் கொடுத்திருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட அது ஜெயிக்கவில்லை. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 11 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு இடத்தில் கூட பகுஜன் சமாஜ் கட்சி ஜெயிக்கவில்லை.
இக்கட்சியின் துரதிர்ஷ்டம் 2014ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட பகுஜன் சமாஜ் வெல்லவில்லை. இதையடுத்து 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதில் சற்று ஆறுதல் கிடைத்தது. அதாவது உபியில் 10 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் வென்றது.

தனித்து போட்டி
இதையடுத்து 2022ல் வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சமாஜ்வாடிக் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. இந்த இடைத் தேர்தலில் அது தனித்துப் போட்டியிட்டது. ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாகி விட்டது. அதாவது சமாஜ்வாடிக் கட்சியை விட்டுப் பிரிந்ததன் விளைவை அது அனுபவித்துள்ளது.

ஒரு இடம்
11 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் தோல்வியைச் சந்தித்துள்ளது. சில தொகுதிளில் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது. இங்கு பாஜக 6 இடங்களில் வென்றுள்ளது. சமாஜ்வாடிக் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு முக்கியமான தொகுதி ஜலாபூர். அதையும் அது இழந்துள்ளது. அதேபோல லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் 4வது இடத்தைப் பிடித்து அதிர வைத்துள்ளது.

அருண் திவிவேதி
இங்கு பிராமண வாக்குகள் அதிகம். எனவே அந்த சமூகத்தைச் சேர்ந்த அருண் திவிவேதியை வேட்பாளராக நிறுத்தியும் நான்காவது இடமே கிடைத்துள்ளது. ராம்பூர் தொகுதி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதி. அங்கு ஜுபைர் மசூத் கான் போட்டியிட்டு நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதேபோலத்தான் ஜைத்பூர் தொகுதியிலும் பரிதாப நிலை. மாணிக்பூர் தொகுதியில் 3வது இடம் கிடைத்துள்ளது.

மாயாவதி
கடந்த தேர்தலில் பெற்றதை விட இந்த இடைத் தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதம் பெருமளவில் சரிந்துள்ளது. இது கட்சித் தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. ஆனால் தேர்தல் முடிவு குறித்து முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி இதுவரை கருத்து ஏதும் சொல்லாமல் உள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications