பெங்களூரில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய பஸ் டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய பள்ளி பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் கெங்கேரியில் உள்ள ஓம்காரா ஹில்ஸுக்கு 19 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் கடந்த மாதம் 25ம் தேதி சென்றுள்ளார். அவர்கள் அங்கு யாரும் இல்லாத வீடு ஒன்றில் பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த பள்ளி பேருந்து டிரைவரான சஞ்சீவ் மூர்த்தி(28) மாணவியின் நண்பர் வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார்.
செல்போனை கேட்டு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது மூர்த்தி மாணவியின் நண்பரை தாக்கியுள்ளார். மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு செல்போனுடன் சென்றுவிட்டார். அதன் பிறகு மூர்த்தி அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு மாணவியை மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால் நடந்ததை வெளியில் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
மூர்த்தியின் மிரட்டல் அதிகமானதால் மாணவி தனது குடும்பத்தாரிடம் நடந்ததை தெரிவித்தார். குடும்பத்தாரில் ஒருவர் கன்னட அமைப்பில் உள்ளவர். அவர் மாணவியை கெங்கேரி காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் மூர்த்தி பறித்துச் சென்ற செல்போன் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications