இங்கிட்டு டோணி அணி வெற்றி, அங்கிட்டு ஆஸ்ட்ரா பரிசோதனை வெற்றி: அசத்தும் இந்தியா
புவனேஸ்வர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ஆஸ்ட்ரா வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் வடிவமைத்து உருவாக்கியது தான் அதிநவீன ஏவுகணையான ஆஸ்ட்ரா. வெறுங்கண்ணால் பார்க்க முடியாத இலக்குகளை கச்சிதமாக தாக்கும் திறண் கொண்டது ஆஸ்ட்ரா.
இந்நிலையில் ஆஸ்ட்ரா ஏவுகணை சோதனை புதன் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பலசூரில் இருந்து இந்த ஏவுகணையை இந்திய விமானப் படை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
வியாழக்கிழமை நடந்த சோதனையின்போது ஏவுகணை சுகோய்-30 எம்கேஐ விமானத்தில் இருந்து ஆளில்லா விமானத்தை நோக்கி ஏவப்பட்டது. ஏவுகணை தனது இலக்கைதுள்ளியமாக தாக்கியது.
முன்னதாக புதன்கிழமை நடந்த சோதனையின்போதும் ஆஸ்ட்ரா ஏவுகணை சுகோய் 30 விமானத்தில் இருந்து தான் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள தேஜாஸ் இலகு ரக விமானத்தில் பயன்படுத்தப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.