For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் 2 நாட்களுக்குள் தமிழகத்திற்கு, 36,000 கன அடி தண்ணீர்.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா சம்மதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்ற உத்தரவுப்படி 36 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவோம் என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு இன்று உறுதியளித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோக்தகி தாக்கல் செய்த மனு, மற்றும் தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்ய கர்நாடகா தாக்கல் செய்த மனு ஆகியவை இன்று, அமித் மிஸ்ரா மற்றும் லலித் குமார் ஆகிய 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

By october 6 We would release 36,000 cusecs to Tamil Nadu, Karnataka tells SC

அப்போது, கர்நாடகா சார்பில் ஆஜரான நாரிமன், தமிழகத்துக்கு அக்டோபர் 6 வரை 36,000 கன அடி நீரை திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 36 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டு கோர்ட்டை சமாதானப்படுத்த கர்நாடகா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுக்கலாம் என்று கர்நாடகா நினைக்கிறது.

English summary
By october 6 We would have released the aggregate quantity of 36,000 cusecs to Tamil Nadu Karnataka tells SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X