ராஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு மரண தோல்வி... இடைத்தேர்தல்களில் காங். அமோக வெற்றி!
ராஜஸ்தானில் 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைந்தது.
ஜெய்ப்பூர்/கொல்கத்தா: ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் 1 சட்டசபை தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இம்மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது.
ராஜஸ்தானின் ஆல்வார், அஜ்மீர், மேற்கு வங்கத்தின் உலுபேரியா லோக்சபா தொகுதிகளுக்கும் ராஜஸ்தானின் மண்டல்கார், மேற்கு வங்கத்தின் நோபரா சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 29-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மேற்கு வங்கத்தின் நோபரா சட்டசபை தொகுதி மற்றும் உலுபேரியா லோக்சபா தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தானின் ஆல்வா, அஜ்மீர் லோக்சபா தொகுதிகள் மற்றும் மண்டல்கர் சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த இடைத்தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியிருப்பது அக்கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.












Click it and Unblock the Notifications