மே.வ. மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலியை நீக்குகிறது மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

Cabinet clears note to remove former SC judge Ganguly as WBHRC chief
டெல்லி: பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலியை மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பயிற்சி பெண் வழக்கறிஞர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

இதைத் தொடர்ந்து ஏ.கே.கங்குலி வகித்து வரும் மேற்கு வங்காள மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் குரல் எழுந்தது. கங்குலி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு கடிதம் எழுதினார்.

அதே நேரத்தில் கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அட்டார்னி ஜெனரல், முதல்கட்ட விசாரணையில் நீதிபதி கங்குலி மீது குற்றம் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார். அவர் தனது கருத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பினார்.

உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையே ஏ.கே. கங்குலிக்கு ஏதிராக டெல்லி போலீஸ் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இந்நிலையில் மேற்கு வங்காள மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலியை நீக்க கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்திற்கு மத்திய அமைச்சரவை வருகிற வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+