சுதந்திர இந்தியாவில் மோடி ஆட்சியில் தான் அதிக பெண்கள் கேபினெட் அமைச்சர்களாக உள்ளோம்.. சுஷ்மா பேச்சு
வாரணாசி: சுதந்திர இந்தியாவில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் தான் இதுவரை இல்லாத அளவு, பெண்களுக்கு கேபினெட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
வாரணாசியில் நடந்த பெண்கள் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்ற சுஷ்மா நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல், தற்போது தான் முதல் முறையாக 6 பெண்களுக்கு கேபினெட் அமைசச்ர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு காலத்தில் 1952-57 ஆண்டுகளில் ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்ற ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே கேபினெட் அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆட்சி காலமான 1957- 62 ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பெண்கள் யாருமே இடம் பெறவில்லை என சுஷ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் 1962- 64ம் ஆண்டுகளில் சுசீலா நாயர் என்ற ஒரு பெண்ணுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் வந்த லால்பகதூர் சாஸ்திரி ஆட்சி காலத்தில் 1964- 66 ம் ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் சுசீலா நாயருக்கு கேபினெட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பின்வரும் ஆண்டுகளான 1967- 71, 1971- 77, 1980- 84 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த 1984- 89 காலகட்டத்தில் மோசினா என்ற பெண்ணுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது
ஆனால் தற்போதைய மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6 பெண்களுக்கு கேபினெட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் காபினட் அமைச்சர்கள் குழுவில் 2 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேபினெட் அந்தஸ்து அமைச்சர் பதவியை அதிக பெண்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் மோடி பெண்களை எவ்வளவு மதிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம் என சுஷ்மா பேசியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications