தானே துயரம்: பிணக்குவியலைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கில் டிவி கேமராமேன் மரணம்
மும்பை: தானே அருகே தனது குடும்பத்தார் 14 பேரைக் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு, இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை படமெடுக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை அடுத்த தானேயில் தனது பெற்றோர், சகோதரிகள், மனைவி மற்றும் குழந்தைகள் என 14 பேரை அஸ்னேன் என்ற இளைஞர் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பதவி உயர்வு கிடைத்துள்ளதாகக் கூறி, அனைவரையும் விருந்திற்கு அழைத்து இந்தக் கொடூரச் செயலை அவர் அரங்கேற்றியுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அஸ்னேன்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்தே கொலைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை, அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரே கொடூரமாகக் கொலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊடகங்கள், செய்தி சேகரிப்பதற்காக சம்பவம் நடந்த வீட்டில் குவிந்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைப் படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ரதன் பவுமிக் (30) என்பவருக்கு, பிணக்குவியலைக் கண்ட அதிர்ச்சியில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தானே மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் டிவி கேமராமேன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications