சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு
Recommended Video

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல்கள் நடைபெறும் தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்தது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். அதில் 10 தொகுதிகள் நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ளவையாகும். அவற்றில் இன்று மதியம் 3 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிற 8 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியுடன் முடிவடைய உத்தரவிடப்பட்டிருந்தது.

எஞ்சிய 72 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 20ம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவு டிசம்பர் 11ம் தேதி தெலுங்கானா, ம.பி., ராஜஸ்தான், மிசோராம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகளுடன் ஒன்றாக, வெளியாக உள்ளது.
இறுதி நாள் பிரச்சாரத்தையொட்டி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் சட்டீஸ்கரில் முகாமிட்டுள்ளனர். பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும், இன்று பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் கட்சி, நகர்ப்புற நக்சலைட்டுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். பதிலடியாக ராகுல் காந்தியோ, பாஜகவால் நக்சலைட்டுகள் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications