திட்டங்களுக்கு தாமத அனுமதி: ஃபிக்கி கூட்டத்தில் ஜெயந்தி நடராஜன் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
டெல்லி: பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் சுற்றுச் சூழல் அமைச்சகம் தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகிக்து வந்த ஜெயந்தி நடராஜன், தமது பதவியை திடீரென்று ராஜிநாமா செய்திருந்தார். அவர் ராஜினாமா செய்ததனின் பின்னணியில், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் முடக்கி வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக ஜெயந்தி நடராஜன் வசம் இருந்த சுற்றுச் சூழல் அமைச்சகத்தை பிடி பிடித்துப் பேசினார்.

நேற்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
அரசின் பல்வேறு நிலைகளில் செயல்படும் தன்னிச்சையான அதிகார மையங்களால் தொழில் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று சனிக்கிழமை ஆற்றிய உரை:
திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மந்தமான முறையில் எடுக்கப்படும் முடிவுகளும், பல்வேறு கட்டங்களில் செயல்படும் தன்னிச்சையான அதிகார மையங்களுமே காரணம். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு, ஒரு திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகமோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில முதல்வரோ எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இதுபோன்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் களையப்பட வேண்டும். நாட்டில் அணுகுமுறைகள் மாறி வருகின்றன. ஆகையால், அனைத்து விவகாரங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் முடிவு எடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.
பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்கின்றனர் தொழில்துறையினர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டியது அவசியம் அதே நேரத்தில் உரிய முடிவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் எடுக்க வேண்டும் என்றார்.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications