புற்றுநோய்.. கணவன், மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
புவனேஸ்வர்: ஒடிஷாவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள சாரிகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் சனதன் தாஸ்(71). அவரது மனைவி ஹரா தாஸ்(65). அவர்களின் மகன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது வருமானத்தை நம்பி தான் சனதன் தம்பதி இருந்தனர். ஹரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வறுமை காரணமாக அவர்களால் புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பின்புறம் உள்ள வயலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அவர்கள் வயலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சைக்கு அதிகம் பணம் செலவாகுவதால் அதை சமாளிக்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அக்கம்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications