''கௌன் பனேகா குரோர்பதியில்'' ரூ.1 கோடி வென்ற புற்று நோயாளி
மும்பை: மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்து கல்லீரல் புற்றுநோயால் அவதிப்படும் மேகா பாட்டில் என்பவர் அமிதாப் பச்சன் நடத்தும் கே.பி.சி. எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மேகா பாட்டில் என்ற இல்லத்தரசி கலந்து கொண்டார்.
மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மேகா.

ரூ.1 கோடி
அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் பதில் அளித்த மேகா ரூ.1 கோடி வென்றார்.

புற்றுநோய்
கடந்த 2008ம் ஆண்டு மேகா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

பணம்
நிகழ்ச்சியில் வென்ற பணத்தை வைத்து தனது மருத்துவ செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கப் போவதாக மேகா தெரிவித்தார். கடனை அடைத்தது போக மீதமுள்ள பணத்தை தற்போது வாங்கும் மருந்துகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார் மேகா.

மகன்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மேகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐ.ஐ.டி.யில் படிக்கும் அவரது மகன் தான் ஊக்குவித்தாராம். பல பொது அறிவு புத்தகங்களை வாங்கி அவர் தனது தாயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.

அமிதாப்
வாழ்க்கையில் நோயுடன் போராடினாலும் துணிச்சலுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேகாவை பார்த்து அமிதாப் பச்சன் நெகிழ்ந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications