பெண்ணின் கண்விழிகளை சாப்பிட்டுவிட்டு முகத்தை சாப்பிட்ட நபர் கையும், களவுமாக பிடிபட்டார்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து அருகே ஹோட்டல் ஒன்றில் பெண்ணின் முகத்தை கடித்து மென்று கொண்டிருந்தபோது ஒருவர் பாதுகாவலர்களிடம் கையும், களவுமாக சிக்கினார்.

சவுத் வேல்ஸில் உள்ள சிர்ஹோவி ஆர்ம்ஸ் ஹோட்டலில் மேத்யூ வில்லியம்ஸ்(34) என்பவர் தங்கி இருந்தார். தனது வீட்டுக்கு அருகே வசித்த நபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தற்போது தான் வெளியே வந்தார். அவர் அந்த ஹோட்டலின் அறையில் வைத்து 22 வயது பெண்ணை தாக்கி அவரின் கண் விழிகளை நோண்டி எடுத்து சாப்பிட்டுள்ளார். மேலும் அவரின் முகத்தை கடித்து மென்று தின்று கொண்டிருந்தார். அப்போது ஹோட்டல் பாதுகாவலர்கள் அவரின் அறைக்குள் நுழைந்த போது அவர் பெண்ணின் மாமிசத்தை சாப்பிடுவதை பார்த்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து வில்லியம்ஸ் மீது டேசர் எனப்படும் எலக்டிரிக் துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்தனர். ஆனால் அவர் பின்னர் மரணம் அடைந்தார். வில்லியம்ஸும் அந்த பெண்ணும் காதலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வில்லியம்ஸால் கொல்லப்பட்ட பெண் பிளாக்வுட்டை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஹோட்டலுக்கு அருகே வசிக்கும் லின் பீஸ்லி என்பவர் கூறுகையில்,

வில்லியம்ஸ் அந்த பெண்ணின் கண்விழிகளை எடுத்து சாப்பிட்டார். மேலும் அப்பெண்ணின் முகத்தை கடித்து சாப்பிட்டார். அவரின் பாதி முகத்தை கடித்து சாப்பிட்டுவிட்டார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+