தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்க தடை இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்க தடை இல்லை என்கிறது மத்திய அரசு.
டெல்லி: தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அரசியல் கட்சியை உருவாக்கி நடத்தவோ அதில் பதவி வகிக்கவோ தற்போதைய சட்டங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்க, பதவி வகிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இவ்வழக்கை தாக்கல் செய்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா, லாலு பிரசாத், சசிகலா, சவுதாலா ஆகியோர் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்; ஆனால் கட்சிகளில் பதவி வகிக்கின்றனர். இதேபோல சுரேஷ் கல்மாடி, ஆ. ராஜா, ஜெகன் மோகன் ரெட்டி, மது கோடா, அசோக் சவாண், ஓவைசி, கனிமொழி, மாயாவதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட பலரும் கட்சி பதவி வகிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, தற்போதைய சட்ட விதிகளின் படி குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கட்சியை தொடங்கவோ, கட்சி பதவிகளை வகிக்கவோ தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் கட்சி பொறுப்புகளை நியமிப்பது என்பது கட்சிகளின் தன்னாட்சி அதிகாரத்தைப் பொறுத்தது எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications