முடங்கியது மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினம்... உருண்டு புரண்டு சாலை மறியல்
பெங்களூர்: கர்நாடகா விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக மைசூர் மற்றும் ஓசூர் செல்லும் சாலைகள் வாகன நெரிசலால் திணறிக் கொண்டிருக்கிறது. மைசூரு, மாண்டியா மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளன.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடகா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
Cauvery issue: Farmers protest in Maddur, attempt to block Mysuru-Bengaluru highway #Karnataka pic.twitter.com/ed9QGNb2uB
— ANI (@ANI_news) September 6, 2016
இதனிடையே கர்நாடகா விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்கள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஓசூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மிக மோசமான வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது.
குறிப்பாக மைசூர் பகுதிதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. திரும்பிய இடமெல்ல்லாம் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராம்நகர், மாண்டியா, மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் போராட்டங்களால் முற்றாக முடங்கிப் போயுள்ளது. மாண்டியாவில் மட்டும் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கர்நாடகா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் கார்டன் ஆகியவற்றை 4 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications