காவிரியில் தண்ணீர் திறப்பு.. கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல்.. கே.ஆர்.எஸ் அணைக்கு பாதுகாப்பு
பெங்களூர்: தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையிலிருந்து காவிரி நீரை விடுவிப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது. இதையடுத்து கே.ஆர்.எஸ் அணைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் விடுவிக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்" என்று மண்டியா கூடுதல் கண்காணிப்பாளர் பி.என். லாவண்யா தெரிவித்தார்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஆனால், கே.ஆர்.எஸ் அணையின் சேமிப்பு அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
காவேரி நீராவரி நிகம லிமிடெட் எக்ஸிகியூடிவ் பொறியாளர் கே. பாசவராஜே கவுடா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜூன் 29 அன்று, 3,000 கனஅடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஜூன் 30ம் தேதி, கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் ஸ்ரீரங்கப்பட்டிணம் பகுதியில் காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய அமைப்பின் தலைவர் மாதேகவுடா, கூறுகையில், "எங்கள் விவசாயிகளுக்கு போதுமான அளவு நீர் இல்லாத போது, அதிகமான நீர் விநியோகத்தை அரசாங்க அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும், " என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications