6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
மத்திய அரசு 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: மத்திய அரசு 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதன்படி காவிரி ஆற்றை தனிப்பட்ட ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம்
கர்நாடகாவுக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்சநீநீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.
6 வாரங்களுக்குள் வாரியம்
தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 1892, 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
15ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்
தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய முடியாது
காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடகா வரவேற்பு
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு கர்நாடகா வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.