For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு- கூடுதல் நீர் கேட்டால் இருப்பதையும் பறித்தது உச்சநீதிமன்றம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ

    டெல்லி: காவிரியில் கூடுதல் நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தி வந்த நிலையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் அளித்த 192 டிஎம்சியையும் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நூற்றாண்டுகளாக நீடிக்கிறது காவிரி நதிநீர் பிரச்சனை. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    Cauvery water dispute: SC to deliver verdict today

    இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் காவிரி வழக்கில் காலை தீர்ப்பளித்தனர். இத்தீர்ப்பில்

    தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மாற்றி தமிழகத்துக்கு 177.25 டிஎம்சியாககுறைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் கூடுதலாக 70 டிஎம்சி நீரை கேட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீரை அளித்து மொத்தம் 284.75 டிஎம்சி நீரை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

    உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    English summary
    The Supreme Court will pronounce the verdict today on appeals against the award of Cauvery Waters Tribunal in 2007 by Tamilnadu, Karnataka and Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X