ஆந்திரா முதல்வர் ஜெகன் சித்தப்பா கொலை வழக்கு- உறவினர் ஒய்எஸ் பாஸ்கர் ரெட்டி சிபிஐயால் திடீர் கைது!
விசாகப்பட்டினம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் ஜெகனின் மற்றொரு உறவினரான ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பா லோக்சபா தொகுதி எம்பியான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ். பாஸ்கர ரெட்டி.
ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்றது ஒய்.எஸ்.ஆர் எனும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி குடும்பம். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜா ரெட்டி 1998-ம் ஆண்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை சம்பவத்தில் தெலுங்குதேசம் கட்சியின் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆந்திராவில் மக்கள் தலைவராக விஸ்வரூபமெடுத்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். மகன் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர அரசியலில் இறங்கினார். தற்போது ஆந்திரா முதல்வராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை சம்பவம் ஜெகன் குடும்பத்தில் நிகழ்ந்த 3-வது அசாதாரண மரணமாகும். ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருந்தபோது சித்தப்பா விவேகானந்தா ரெட்டி படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரியவர் ஜெகன். இப்போது சிபிஐ இவ்வழக்கை விசாரித்து வருகிறது. ஆனால் தாம் முதல்வரான போது விசாரணை குழுக்களை மாற்றி மாற்றி அமைத்தார் ஜெகன். இதனால் அவர் மீது விவேகானந்த ரெட்டி மகள் அதாவது ஜெகனின் சித்தப்பா மகள் சுனிதா ரெட்டி, சந்தேகப் புகாரும் கொடுத்திருந்தார்.
இதனிடையே விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் கடப்பா எம்பியும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினருமான அவினாஷ் ரெட்டியின் நெருக்கமான உதவியாளர் கஜாலா உதயகுமார் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து 48 மணிநேரத்துக்குள் அவினாஷ் ரெட்டியின் தந்தையும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினருமான ஒ.எஸ்.பாஸ்கர ரெட்டி அதிரடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

2019-ம் ஆண்டு தேர்தலின் போது கடப்பா தொகுதி எம்பி சீட்டை அவினாஷ்க்கு தரவே கூடாது என முட்டுக் கட்டை போட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி. அவினாஷ்க்கு பதில் ஜெகன் சகோதரி சர்மிளா, ஜெகன் அம்மா உள்ளிட்ட ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என குடும்பத்தில் போராடியவர் விவேகானந்தா ரெட்டி. இதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications