பாத்ரூமிற்குள் பல கோடி பணம் பதுக்கல்.. கர்நாடகாவில் ஹவாலா நபர் கைது.. வங்கி அதிகாரிகளுக்கு வலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், சல்லக்கெரே என்ற குட்டி நகரத்தை சேர்ந்தவர் கே.வி.விஜேந்திரா. இவர் சட்ட விரோதமாக பணத்தை மாற்றும் ஹவாலா ஏஜென்ட் என வருமான
வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. சமீபத்தில் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 6 கோடி ரூபாய் ரொக்கம், 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பணத்தை அவர் பாத்ரூமுக்குள் ஒரு ரகசிய பெட்டகம் அமைத்து பாதுகாத்து வந்தது சோதனையின்போது அம்பலமானது. அதிலும் 5.7 கோடி ரூபாய் பணம் முழுக்க முழுக்க சமீபத்தில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பணத்தை மாற்ற உதவிய வங்கி அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications