ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க சிவசங்கரனுக்கு தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார்: சிபிஐ
டெல்லி: ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் கேட்ட ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வலியுறுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பது புகார்.
மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் கைமாறியதைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் சகோதரர் நிறுவனத்தில் மேக்சிஸ் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு.

குற்றப்பத்திரிகை
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சைனி முன்னிலையில்..
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யார்? யார்ர்?
சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இக்குற்றப்பத்திரிகையில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அதன் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மெண்ட்ஸ் ஹோல்டிங் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இன்று விசாரணை
இன்று இந்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மூத்த அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல் நீதிமன்றத்தில் கூறியதாவது:

நிலுவையில் வைத்த தயாநிதி
சிவசங்கரன் நிறுவனங்கள் குறித்த பல விவகாரங்களை, பிரச்சினைகளை அப்போது தொலைத் தொடர்புத் துறை மத்திய அமைச்சர் பதவியிலிருந்த தயாநிதி மாறன் நிலுவையில் வைத்திருந்தார்..

விற்க வேண்டிய நிலை..
சிவசங்கரனை வர்த்தகம் செய்ய அனுமதிக்காமல் நெருக்கடி கொடுத்தார் தயாநிதி மாறன். சிவசங்கரனின் 3 நிறுவனங்கள் மீதும் தயாநிதி பிடியை இறுக்க, அவரால் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க வேண்டிய நிலை வந்தது.

ஏன் நெருக்கடி
தயாநிதி மாறன், சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியிருந்தால் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்கும்.
அதனால் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு முன்னரே ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டது.

செப். 22ல் விசாரணை
இவ்வாறு கே.கே.கோயல் வாதிட்டார். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்,
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications