4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுபிரசாத் யாவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு
4-வதுகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவிற்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
ராஞ்சி : 4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் யாதவுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் 1990களில் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் இருந்தபோது, கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கிய வழக்கில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இத்திட்டத்தின் கீழ் மாநில கருவூலங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
900 கோடி ரூபாய் அளவில் நடந்த ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட முதல் வழக்கின் தீர்ப்பில் லாலுவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிறை சென்ற லாலு, ஜாமீனில் விடுதலையாகி அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்துள்ளார்.
தேவ்கர் மாவட்ட கருவூலத்தில் கையாடல் செய்யப்பட்ட பணம் தொடர்பான இரண்டாவது வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், கடந்த டிசம்பர் மாதம் லாலுவிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனையும், பத்து லட்சம் அபராதமும் விதித்தார்.
மூன்றாவதாக சைபாஸா மாவட்ட கருவூலத்தில் முறைகேடாக ரூ.37.62 கோடி ரூபாய் எடுத்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம், லாலுவிற்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,இரு தினங்களுக்கு முன்பு தும்கா மாவட்ட கருவூலத்தில் கையாடல் செய்யப்பட்ட ரூபாய் 3.13 கோடி ரூபாய்க்கான நான்காவது வழக்கில் லாலுபிரசாத் யாதவை குற்றவாளியாக அறிவித்தது சிபிஐ நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளதால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications