4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுபிரசாத் யாவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு
4-வதுகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவிற்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
ராஞ்சி : 4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் யாதவுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் 1990களில் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் இருந்தபோது, கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கிய வழக்கில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இத்திட்டத்தின் கீழ் மாநில கருவூலங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
900 கோடி ரூபாய் அளவில் நடந்த ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட முதல் வழக்கின் தீர்ப்பில் லாலுவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிறை சென்ற லாலு, ஜாமீனில் விடுதலையாகி அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்துள்ளார்.
தேவ்கர் மாவட்ட கருவூலத்தில் கையாடல் செய்யப்பட்ட பணம் தொடர்பான இரண்டாவது வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், கடந்த டிசம்பர் மாதம் லாலுவிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனையும், பத்து லட்சம் அபராதமும் விதித்தார்.
மூன்றாவதாக சைபாஸா மாவட்ட கருவூலத்தில் முறைகேடாக ரூ.37.62 கோடி ரூபாய் எடுத்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம், லாலுவிற்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,இரு தினங்களுக்கு முன்பு தும்கா மாவட்ட கருவூலத்தில் கையாடல் செய்யப்பட்ட ரூபாய் 3.13 கோடி ரூபாய்க்கான நான்காவது வழக்கில் லாலுபிரசாத் யாதவை குற்றவாளியாக அறிவித்தது சிபிஐ நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளதால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications