நான் பேசியது தவறாக இருந்தால் மன்னியுங்கள்.. 'ரேப்' பற்றிப் பேசிய சிபிஐ இயக்குநர் வருத்தம்
டெல்லி: பாலியல் பலாத்காரம் குறித்து நான் பேசிய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத வார்த்தையாக அது வந்து விட்டது. நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று கூறியுள்ளார் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா.
பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க முடியாவிட்டால் அதை அனுபவியுங்கள் என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார் ரஞ்சித் சின்ஹா. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சின்ஹா பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சின்ஹா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தவிர்க்க முடியாத வையில், உள்நோக்கமின்றி பேசிய பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது நான் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளேன் என்பது உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.
முன்னதாக சின்ஹாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தருந்த சிபிஎம் தலைவர் பிருந்தா காரத், மிகப் பெரிய பொறுப்பில், அதுவும், பாலியல் வழக்குகள் பலவற்றை விசாரித்துக் கொண்டிருக்கும் ஒரு உயரிய அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது என்று கூறியிருந்தார்.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் சின்ஹாவின் கருத்தைக் கண்டித்திருந்தார். அவரது பேச்சு நம்ப முடியாத அதிர்ச்சியைத் தருகிறது என்று தஸ்லிமா தெரிவித்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications