நான் பேசியது தவறாக இருந்தால் மன்னியுங்கள்.. 'ரேப்' பற்றிப் பேசிய சிபிஐ இயக்குநர் வருத்தம்
டெல்லி: பாலியல் பலாத்காரம் குறித்து நான் பேசிய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத வார்த்தையாக அது வந்து விட்டது. நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று கூறியுள்ளார் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா.
பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க முடியாவிட்டால் அதை அனுபவியுங்கள் என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார் ரஞ்சித் சின்ஹா. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சின்ஹா பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சின்ஹா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தவிர்க்க முடியாத வையில், உள்நோக்கமின்றி பேசிய பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது நான் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளேன் என்பது உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.
முன்னதாக சின்ஹாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தருந்த சிபிஎம் தலைவர் பிருந்தா காரத், மிகப் பெரிய பொறுப்பில், அதுவும், பாலியல் வழக்குகள் பலவற்றை விசாரித்துக் கொண்டிருக்கும் ஒரு உயரிய அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது என்று கூறியிருந்தார்.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் சின்ஹாவின் கருத்தைக் கண்டித்திருந்தார். அவரது பேச்சு நம்ப முடியாத அதிர்ச்சியைத் தருகிறது என்று தஸ்லிமா தெரிவித்திருந்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications