குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.. சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டது.. நீதிபதி சைனி சொன்னது இதுதான்!
குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் கனிமொழி கனிமொழி என கோஷமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர்.
நீதிமன்ற வளாகத்திலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அனைவரும் விடுதலை
இதனால் திமுகவுக்கு எதிராக தீர்ப்பு வருமோ என்ற அச்சம் திமுகவினர் இடையே வந்தது. ஆனால் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி கனிமொழி, ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

சிபிஐ தவறிவிட்டது
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று ஓபி சைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அனைவரும் விடுதலை
சந்தேகத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி. இதன்மூலம் கனிமொழி எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ராஜாத்தியம்மள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சர்வதேசளவில் தலைப்பு செய்தி
1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக பாஜக மூத்தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். ஆட்சி மாற்றத்துக்கு காரணமான இந்த ஊழல் வழக்கு சர்வதேச அளவில் தலைப்பு செய்தியானது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications