11 வங்கிகளை ஏமாற்றி ரூ. 2,654 கோடி கடன் மோசடி... குஜராத் டைமண்ட் நிறுவனம் மீது வழக்கு!
11 வங்கிகளை ஏமாற்றி ரூ.2,654 கோடி மோசடி செய்த வதோதராவை சேர்ந்த டைமண்ட் பவர் உள்கட்டமைப்பு லிமிடெட் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி : போலி வங்கிக்கணக்குகள், மோசடியான ஆவணங்களைக் காட்டி 11 வங்கிகளிடம் ரூ. 2,654.40 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வதோதராவைச் சேர்ந்த டைமண்ட் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 ஊழல் தடுப்புச் சட்டங்கள் உள்பட 5 பிரிவுகளின் கீழ் இந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. டைமண்ட் பவர் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் நரேன்பட்நகர், நிர்வாக இயக்குனர் அமித் சுரேஷ் பட்நகர், துணை நிர்வாக இயக்குனர் சுமித் சுரேஷ் பட்நகர் ஆகிய 3 பேரும் இந்த மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வங்கி அதிகாரிகளின் துணையோடு தவறான வங்கிக்கணக்குகள், மோசடி ஆவணங்கள், தவறான தகவல்களைக் கொடுத்து ரூ.2,654.40 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த நிறுவனமும் அதன் இயக்குனர்களும் மோசடியாக கடன் பெற்றதோடு சலுகைகளையும் அனுபவித்துள்ளனர். இவர்கள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட மோசடியாளர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் கனிஷ்க் கோல்ட் நிறுவனம் ரூ. 824.15 கோடி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தை சேர்ந்த டோடெம் இன்ப்ராஸ்டரக்சர் நிறுவனம் ரூ. 1,394 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிறுவனம் கேபிள் மற்றும் இதர எலக்ட்ரிகல் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றன.
தற்போது சிபிஐ பிடியில் சிக்கியுள்ள வதோதரா நிறுவனம் கடந்த 2008 முதல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை மோசடி செய்து ரூ. 2,654.40 கோடி ஏமாற்றியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி, தேனா வங்கி, எஸ்பிஐ, ஐஓபி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் சில நிதி நிறுவனங்களை ஏமாற்றியுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. டைமண்ட் பவர் நிறுவனத்தின் உரிமையாளர்களின் வதோதரா வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications