ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் கோரும் சிபிஐ

மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு இந்தியாவின் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததன் மூலம் 547 கோடி ரூபாய் அளவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும், சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோர் பலனடைந்தனர் என்பது வழக்கு.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாறன் சகோதரர்கள், மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் மேக்ஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரால்ஃப் மார்ஷல், சன் டைரடக்ட் டிவி, ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு மலேசிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று அண்மையில் சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கையில் உள்ள ஆவணங்களின்படி வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை முடிக்கக் கூடுதல் கால அவகாசம் கோர திட்டமிட்டிருப்பதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications