ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள சிபிஐ, அவரிடம் மேலும் விசாரிக்க தேவையுள்ளதால் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தது. நீதிமன்றம், மேலும் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபியால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட 5 நாள் காவல் நிறைவடைந்ததையடுத்து டெல்லி பட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

மும்பை சிறையில் இந்த வழக்கில் தொடர்புள்ள இந்திராணி முகர்ஜியுடன் கார்த்தி சிதம்பரத்தை சேர்த்து வைத்து விசாரித்தபோது கூட கார்த்தி சிதம்பரம் உண்மைகளை வெளியிடாமல் நழுவியதாக சிபிஐ தரப்பு அப்போது குற்றம்சாட்டியது. எனவே, மீண்டும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேவையுள்ளதால் அதற்கு அனுமதிக்குமாறு சிபிஐ தரப்பு கோரியது.
ஆனால், சிபிஐ காவல் நீட்டிப்பு கேட்கிறார்கள் என்றால் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடிய காரணத்தை தெரிவிக்க வேண்டும், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சிபிஐ செயல்படுகிறார்கள் என்று கார்த்திக் சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, கார்த்திக் சிதம்பரத்தை ஏன் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்ற காரணங்கள் அடங்கிய கோப்பினை சீலிடப்ப்ட்ட கவரில் நீதிபதியிடம் ஒப்படைத்தது சிபிஐ.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கார்த்திக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து உத்தரவிட்டார். முன்னதாக, முதலில் 1 நாள் காவலும் பிறகு 5 நாள் காவலும் விதிக்கப்பட்டிருந்தது. 3வது முறையாக கார்த்தி சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications